மட்டக்களப்பு நகரை அண்மித்த பூம்புகார்ப் பகுதியில் நேற்று பகல் வேளையில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் எவரும் இல்லாத நிலையில் வீட்டின் யன்னலை உடைத்து, இரண்டு இலட்சத்து 94ஆயிரம் ரூபா பெறுமதியான நகையும் 3000 ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது.
குறித்த கொள்ளையினைப் பிடிப்பதற்கு மட்டக்களப்புப் பொலிஸ் நிலைய குற்றப்புலன்விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி த.சாந்தகுமார் தலைமையிலான குழுவினர் போப்பநாயுடன் தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பில் அண்மைக் காலமாக இடம்பெற்ற வரும் பகல் கொள்ளை தொடர்பாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவிக்கையில், ஆட்கள் இல்லாத வீடுகளிலேயே இக்கொள்ளை இடம்பெற்று வருவதாகவும் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment